Saturday, 29 June 2013

கனாவே கனாவே - அம்பிகாபதி (Kanaave Kanaave Lyrics - Ambikapathy(2013))

 

கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு 
வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு 
கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு 
வினாவோ வினாவோ உன் நெஞ்சில் இருக்கு 

வீட்டுக்குள் மான்கள் படையெடுத்தோட  
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட 
திருமண வீடு திக்கு முக்கு ஆட 

குயிலே நடத்து ஒரு கலாட்டா 
  ஒரு  சுவை இல்லை ஒரு சண்டை இல்லாட்டா 
ஆ... துள்ளி  வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை 
திருமண  வீடு என்றும் தூங்குவது இல்லை 
பாட்டிகள் எல்லாம் தாவணி போட 
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் உடன் ஆட 
வாண்டுகள் எல்லாம் கை  கொட்டி ஆட 

ஊரும் உறவும் இங்கு ஒன்றுபட்டாலே 
வீடு வாசல் அது ரெண்டு படாதோ  
தேனின் முகத்தில் ஒரு ஈ ஒட்டாதே 
எங்கள் அகத்தின் துயர் நில்லாதே 
காற்றுக்கு கவலை ஓ... பாட தெரியாதே 
மருதாணி பூசி மகராணி ஆவோம் 
வண்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம் 

ஓ... வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ 
வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ கொட்டாதோ 
நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ 
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ 
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ 
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ 
தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ 
திருமணமே சொர்க்கம் என்று ஆகாதோ ஆகாதோ

ஓ... விண்ணும் மண்ணும் கூடி ஓ... வாழ்த்தட்டுமே
மணமக்கள் வாழ்க மங்களம் வாழ்க 
மணமக்கள் வாழ்க மங்களம் வாழ்க 
ங்களம் வாழ்க  மங்களம் வாழ்க 

படம்                : அம்பிகாபதி  
பாடல் வரிகள்   : வைரமுத்து 
பாடியவர்கள்     : மதுஸ்ரீ, வைசாலி, சின்மயீ, பூஜா, சரண்யா ஸ்ரீநிவாஸ் & அஞ்சால் சேதி 
இசை                 : A R ரஹ்மான் 

No comments:

Post a Comment