Showing posts with label thalaivaa song tamil lyrics.. Show all posts
Showing posts with label thalaivaa song tamil lyrics.. Show all posts

Sunday, 23 June 2013

யார் இந்த சாலையோரம் - தலைவா (Yaar intha saalaiyoram - Thalaivaa)


யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 

நகராமல் இந்த நொடி நீல 
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே 
குளிராலும் கொஞ்சம் அனலாலும் 
இந்த நெருக்கம் தான் கொல்லுதே 
எந்தன் நாளானது இன்று வேறானது 
வண்ணம் நூறானது வானிலே 

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 

தீர தீர ஆசை யாவும் பேசலாம் 
மெல்ல தூரம் விலகி போகும்வரையில் தள்ளி நிற்கலாம் 
என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் 
இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் 
என்னாகிறேன் என்று ஏதாகிறேன் 
எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன் 
எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது 
அது பறந்தோடுது வானிலே 

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 

மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே 
அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே 
வைரம் போல பெண்ணின் மனது உலகிலே 
அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் 
என்றும் மண்ணிலே 
கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி 
என் பாதையில் இன்று உன்காலடி 
நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும் 
நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி 

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்ததோ 
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது 
யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது 
இன்று பேசாமல் கண்கள் பேசுது 
நகராமல் இந்த நொடி நீல 
எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே 
குளிராலும் கொஞ்சம் அனலாலும் 
இந்த நெருக்கம் தான் கொல்லுதே 
எந்தன் நாளானது இன்று வேறானது 
வண்ணம் நூறானது வானிலே 

படம்                : தலைவா 
பாடல் வரிகள்   : நா முத்து குமார்  
பாடியவர்கள்     : ஜீ வீ  பிரகாஷ் குமார் & சைந்தவி 
இசை                 : ஜீ வீ  பிரகாஷ் குமார்